கொழு கொழு கன்னங்கள் சின்ன சின்ன சந்தோஷங்கள்

குட்டி போடாத மயில் இறகும்

இழுத்து மூடும் பென்சில் பாக்ஸும்

ஓடி ஏறிய பல்லவன் பஸ்சும்

ஒழுகி சாப்பிட்ட குச்சி ஐசும்

நொய்ந்து போன கேன்வாஸ் ஷூம்

ஜடையில் வைத்த ரோஜா பூவும்

நாடார் கடை கமர்கட்டும்

ரசித்து போட்ட கலர் கோலமும்

உப்பு மிளகாய் மாங்காய் கீத்தும்

மெரினா பீச்சின் மாலை காற்றும்

ஆட்டோ ரிக்ஸா பேரங்களும்

ஆஞ்சநேயர் கோயில் அடிப்பிரதக்ஷணங்களும்

மொட்டை மாடியில் வேடிக்கையும்

மஞ்சள் பட்டு பாவடையும்

என் வெகுளி எண்ணங்களும்

என் கொழு கொழு கன்னங்களும்

சின்ன சின்ன சந்தோஷங்கள்

உள்ளம் தொட்ட தருணங்கள்

மனதிற்கு பிடித்த நினைவுகள்

அறியாமல் சேர்த்த பொக்கிஷங்கள்

தினசரி வாழ்க்கையில் நிறைய உண்டு

எழுதிகொண்டே போகலாம்

விலைக்கு வாங்கத் தேவையில்லை

வியர்த்து அயரத் தேவை இல்லை

விழித்திருந்து ரசிக்கக் கற்றால்

வெய்ட்டனா மனது லைட் ஆகும்

அம்மா…

அம்மா நீ சமைத்தால் தினம்தினம்,
ஊரைத்தூக்கும் நறுமணம்

நீ வைத்தது சிம்பிள் சாம்பார் ரசம்
உண்பவர் விழுவார் உன் வசம்

அப்பப்போ டிபன் பாக்ஸில் பச்சை பருப்பு சாதம்
என் காலேஜ் friends க்கு அதுவே தேவாமிருதம்

தீபாவளிக்கு தூக்கு, ட்ரம் என சுட்டுத்தள்ளுவையே முறுக்கு
எனக்கு இன்று 10 பிழிவதற்குள் பிடித்தது கை சுளுக்கு

Fridgeக்குள் இருக்க வேண்டும் நிறைய நிறைய தக்காளி
குறைந்து விட்டாலோ அன்று நீ ஆவாயே பத்ரகாளி

படித்து என்னத்துக்கு ஆகும், “ ஒலியும் ஒளியும் பாரு “
அப்போ நான் கேட்கவில்லை , இப்போ சொல்ல எனக்கு யாரு

உனக்கு துவைத்த துணியை நீவிநீவி மடிக்க வேண்டும்
ரோஜா செம்பருத்தி என மிச்ச நேரம் செடிக்கு வேண்டும்

நீ போட்ட எம்ராய்டிங் எல்லாம் சூப்பர்டூப்பர் அழகே
அம்மா நீ ரொம்ப ரொம்ப வெகுளி , பார்த்து பேசி பழக

சிப்ஸ் பஜ்ஜி snacks sometimes meals ஆக மாறும்
எமக்கு வாயை கட்ட முடியாமல் weight வஞ்சனை இன்றி ஏறும்

இனிப்பான என் அம்மாவிற்கு பத்தாதற்கு சர்க்கரை
No big deal வீடும் வேலையும் தான் உனக்கு அக்கறை

வெட்டி சண்டை வீண்வாதம் நான் போட்டது கணக்கு இல்லை
இன்று அது திருப்பி வரும் என அறிவு அன்று எனக்கு இல்லை

என் கடமை முடிந்ததென தினமும் எழுதினாய் ஶ்ரீராமஜெயம்
விருப்பம்போலவே ஏகாதசி அன்று நீ வைகுண்டத்துக்கு விஜயம்.

சிறு வயது தந்த
இனிதான நியாபகங்கள்
கலக்கமான மனதினில்
உருக்கமான நினைவுகள்
இருட்டு வந்தபின் தான்
வெளிச்சம் எனக்கு விளங்கியது!!